வற் வரியை 18 வீதம் வரை உயர்த்தும் அரசாங்கத்தின் வரி திருத்தச்சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று இரவு அலரி மாளிகையில் விருந்துபசாரமொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரதமர் நடத்திய இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்துகொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கையை மேலும் சீரழிக்கும் வற் வரி உயர்வை கொண்டாடும் அரசாங்கத்தை பற்றி மக்கள் மேலும் விழிப்படைய வேண்டும்.
வற் வரியை அதிகரிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
